" மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் "
கோடை நிழலுக்கு - வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். பசுந்தழை உரத்திற்கு - புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு. கால்நடைத் தீவனத்திற்கு - ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல். விறகிற்கு - சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல். கட்டுமான பொருட்கள் - கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி. மருந்து பொருட்களுக்கு - கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் எண்ணெய்க்காக - வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம் காகிதம் தயாரிக்க - ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல் பஞ்சிற்கு - காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு தீப்பெட்டித் தொழிலுக்கு - பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு. தோல்பதனிடவும், மை தயாரிக்கவும் - வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய் நார் எடுக்க - பனை, ஆனைப்புளி பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த - வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி கோயில்களில் நட - வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு குளக்கரையில் நட - மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை பள்ளிகளில் வளர்க்க - நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல் மேய்ச்சல் நிலங்களில் நட - கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி சாலை ஓரங்களில் நட - புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு அரக்கு தயாரிக்க - குசும், புரசு மற்றும் ஆல் நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட - கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், வேலிக்கருவேல், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம்.